அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வாட்டிவதைக்கும் வெயில் | தயார் நிலையில் ஈரோடு
ஈரோடு அரசு மருத்துவமனையில் வெப்ப தாக்க சிகிச்சை பிரிவு தொடக்கம் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெப்ப அலையினால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் பிரத்யேக 'வெப்ப தாக்க சிகிச்சை பிரிவு' தொடங்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக திடீரென மயக்கம் அடைபவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஓ.ஆர்.எஸ். உள்ளிட்ட அவசர மருத்துவப் பொருட்கள் இந்தப் பிரிவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெப்ப அலை வீசுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய அரசு மருத்துவர் கணேசன், வெப்ப அலையினால் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.