தமிழ்நாடு

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் - இருவரைப் பிடித்து தீவிர விசாரணை

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஈரோடு ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் போன் செய்து, வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்து இணைப்பினை துண்டித்துள்ளார். இதையடுத்து ஏ.டி.எஸ்பி. பொன் கார்த்திக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, மோப்பநாய் கயல் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பிளாட்பாரங்கள், உணவகங்கள், பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை