தமிழ்நாடு

மனைவி விஷம் அருந்தியதால் போக்குவரத்து காவலர் தற்கொலை முயற்சி

ஈரோட்டில் கடன் தொல்லையால் போக்குவரத்து காவலர் ஒருவர், மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
ஈரோட்டில் கடன் தொல்லையால் போக்குவரத்து காவலர் ஒருவர், மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு வடக்கு போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த பூமலை, குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனைவி கலைச்செல்வி விஷம் அருந்தி மயங்கினார். இதனை கண்ட பூமலையும் விஷம் அருந்தினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி