தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி - தந்தை, மகன் இருவர் கைது

ஈரோடு அருகே போலி நியமன ஆணை தயாரித்து பேராசிரியரிடம் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஈரோடு, பெரிய சேமூர் சோழா நகரைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இவரை அணுகிய சிலர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய கோகுல கண்ணன் சுமார் 7 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் பணி நியமன ஆ​ணை ஒன்றை அந்த கும்பல் கோகுல கண்ணனிடம் கொடுத்துள்ளது. ஆனால் அந்த நியமன ஆணை போலி என்பது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் நாடார்மேடு, திலகர் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் அவரது தந்தை ரவிக்குமாரை சூரம்பட்டி போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’