தமிழ்நாடு

Erode | பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - வாக்கெடுப்பு தோல்வி

தந்தி டிவி

ஈரோடு கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் மீது, நீதிமன்ற உத்தரவுப் படி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் வாக்கெடுப்பு தோல்வியை தழுவியது.

பேரூராட்சி தலைவி திலகவதி மீது ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, தகுதி இழப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், திலகவதி

சென்னை உயர்நீதிமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, இடைக்கால தடை பெற்றார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புப்படி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, கவுன்சிலர்கள் வராததால் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து மீண்டும் அவரே தலைவர் பதவியில் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது...

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?