தமிழ்நாடு

பர்கூர் மலைப் பாதையில் திடீர் மண்சரிவு : 5 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது. தமிழக - கர்நாடக பிரதான சாலையில் செட்டி நொடி என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. அங்கு அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதாகவும் , அதை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்