தமிழ்நாடு

தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமாக உயிரிழந்த நிலையில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமாக உயிரிழந்த நிலையில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளமுருகன் என்பவர் வேலை பார்த்து வந்த, தனியார் ஜவுளி நிறுவனத்தில், பல லட்ச ரூபாய் கையாடல் நடந்ததாக புகார் எழுந்ததால், ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, இளமுருகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், போலீசார் 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், போராடியவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்