தமிழ்நாடு

விசைத்தறி பட்டறையில் பதுக்கிய போதை பொருள் : அதிரடி வேட்டையில் 220 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, அதிகாரிகள் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், கடைக்காரருக்கு சொந்தமான விசைத்தறி பட்டறையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ, குட்கா, பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து கமல் என்பவரை விசாரணை செய்த போது, 10 பாக்கெட் குட்கா வாங்கினால் ஒரு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்