தமிழ்நாடு

குடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்

ஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு பெரிய சேமூர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது அண்ணன் மனைவியான லட்சுமி, கணவருடன் வாழாமல் வேறொருவருடன் சென்று விட்டார். இந்நிலையில் தமது அண்ணியை பேசி சமாதானம் செய்து செல்வக்குமார் அண்ணனுடன் சேர்ந்த வாழ வேண்டும் என கூறி, வீட்டிற்கு கடந்த 3 ஆம் தேதி அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று செல்வக்குமார் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த போது, அண்ணி லட்சுமி உள்ளிட்ட உறவினர்கள், அவரை கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஈரோடு போலீசார், அண்ணி லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்