தமிழ்நாடு

குடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்

ஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு பெரிய சேமூர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது அண்ணன் மனைவியான லட்சுமி, கணவருடன் வாழாமல் வேறொருவருடன் சென்று விட்டார். இந்நிலையில் தமது அண்ணியை பேசி சமாதானம் செய்து செல்வக்குமார் அண்ணனுடன் சேர்ந்த வாழ வேண்டும் என கூறி, வீட்டிற்கு கடந்த 3 ஆம் தேதி அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று செல்வக்குமார் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த போது, அண்ணி லட்சுமி உள்ளிட்ட உறவினர்கள், அவரை கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஈரோடு போலீசார், அண்ணி லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்