தமிழ்நாடு

தமிழகத்தில் காலியான தொகுதி... முறைப்படி அறிவிப்பு - இடைத்தேர்தல் எப்போது?

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு மாவட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்த வந்த நிலையில், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் இருந்து, ஈரோடு தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்ப பட்டது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை