Erode | சின்னக்கோசணம் பூதநாச்சியம்மன் கோயிலில் ஆடிப் பொங்கல் திருவிழா
ஈரோடு மாவட்டம் சின்னக்கோசணம் பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசுவாமி கோயிலில் ஆடிப் பொங்கல் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், நேர்த்திக்கடனாக செலுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சமைக்கப்பட்ட கறிவிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.