தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 250 கோடியே 50 லட்ச ரூபாயை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.