தமிழ்நாடு

நேர்முகத் தேர்வை விரைந்து நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் விரைந்து நேர்முகத் தேர்வை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி சுனில் சேட் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர், உறுப்பினர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்து, தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருவதாகவும், அதன்பின் பணி ஆணை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து நேர்முகத்தேர்வை நடத்தி முடித்து பணி நியமனம் வழங்கும் பணியை துரிதப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி