தமிழ்நாடு

கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 5 நாளில் கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கழிவுகளில் 20 டன்கள் அகற்றப்பட்டு உள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கடந்த 18 ஆம் தேதி கொச்சியில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகம் வந்த கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி ஐந்து நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதுவ​ரை 20 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், இன்னும் ஏராளமான எண்ணெய் கழிவுகள் கடல் அடியில் தேங்கி உள்ளது என்றும் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இந்த எண்ணெய் கழிவுகளால், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கடலோர காவல் படை சுட்டிக்காட்டி உள்ளது. இதனிடையே 4 புள்ளி 37 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து கோரல் ஸ்டார் கப்பல் நிறுவனம் நீதிமன்றம் சென்றுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்