தமிழ்நாடு

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை : ஆசிரியர்கள் மீது மாணவியின் தாய் புகார் - முதல்வரிடம் நேரில் மனு

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர், கோயம்புத்தூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பூசாரிப்பாளையத்தை சேர்ந்த யுரேகா, தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். குத்துச்சண்டையில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்தவரை, விளையாட்டு ஆசிரியர் பாலமுருகன், முதல்வர் சிவக்குமார், ஆகியோர் தொடர்ந்து விளையாட அனுமதிக்காததுடன், மன உளைச்சல் அடையும் அளவுக்கு செயல்பட்டதாக கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் மாணவி யுரேகா என்பதால், ஆசிரியர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துக்கொண்டதாகவும், இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தாய், முதலமைச்சரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி