தமிழ்நாடு

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை : ஆசிரியர்கள் மீது மாணவியின் தாய் புகார் - முதல்வரிடம் நேரில் மனு

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர், கோயம்புத்தூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பூசாரிப்பாளையத்தை சேர்ந்த யுரேகா, தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். குத்துச்சண்டையில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்தவரை, விளையாட்டு ஆசிரியர் பாலமுருகன், முதல்வர் சிவக்குமார், ஆகியோர் தொடர்ந்து விளையாட அனுமதிக்காததுடன், மன உளைச்சல் அடையும் அளவுக்கு செயல்பட்டதாக கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் மாணவி யுரேகா என்பதால், ஆசிரியர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துக்கொண்டதாகவும், இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தாய், முதலமைச்சரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்