பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கும் இன்றே கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை, ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 33 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். இவர்களில் ஒரு லட்சத்து 28ஆயிரத்து 118 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். இதேபோல், சான்றிதழ்களை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.