தமிழ்நாடு

காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டில் வந்த கம்ப்யூட்டர் பொறியாளர் கைது

காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டில் சென்னை விமான நிலையம் வந்த கம்ப்யூட்டர் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வர முயன்றுள்ளார். இதை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை அதிகாரிகள் தடுத்து, விசாரித்தபோது, சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த வருண் என்பதும், தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பொறியாளராக இருப்பதும் தெரிந்தது.

மேலும் பயணத்தை ரத்து செய்துவிட்டு செல்வதாக கூறிய அவரது பயணச்சீட்டை பார்த்தபோது, அதில் ஒரு பெண்ணின் பெயரும், இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. விசாரணையில், இவரது காதலி, திருவனந்தபுரம் செல்ல விமான நிலையம் வந்த நிலையில், அவரை வழியனுப்ப அவரது பயணச்சீட்டில் இவரது பெயரையும் போலியாக சேர்த்ததும் தெரியவந்தது.

காதலி விமானத்தில் ஏறிச் சென்றபின் அந்த பயணச்சீட்டைக் காட்டி வெளியே வர முயன்றபோது, அதிகாரிகளிடம் சிக்கினார் வருண். இதையடுத்து, விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"