புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் RC நடுநிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு விழாவில் பலரும் பங்கேற்று தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஜவ்வுமிட்டாய், கல்கோனா உள்ளிட்டவற்றை மீண்டும் ஒன்றாக சாப்பிட்ட அவர்கள், தங்களின் பழைய நினைவுகளையும், தற்போதைய வாழ்க்கை அனுபவங்களையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.