தமிழ்நாடு

அடிக்கடி மலைப் பாதையில் உலவும் யானைகள் : படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை

யானைகளை புகைப்படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தந்தி டிவி
யானைகளை புகைப்படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீலகிரி அருகே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில், குட்டியுடன் யானைகள் சுற்றி வருகின்றன. அவற்றை கண்டு உற்சாகமடையும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள், யானைகளை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். செல்போன் மற்றும் கேமராக்களின் பிளாஷ் வெளிச்சத்தால், யானைகள் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறும் வனத்துறை அதிகாரிகள், யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என கோரியுள்ளனர். மீறி புகைப்படம் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை