தமிழ்நாடு

தடுமாறி குழிக்குள் விழுந்த யானை - வனத்துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு

பொள்ளாச்சியில் கோவில் திருவிழாவிற்கு வந்த யானை ஒன்று தவறி குழிக்குள் விழுந்த நிலையில், அதனை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டுள்ளனர்

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர், குலாபி என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார்.இந்த யானையை, பொள்ளாச்சியில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு, கஜ பூஜைக்காக, லாரி மூலம் கொண்டு வந்தனர். மகாலிங்கபுரம் பகுதியில் லாரியில் இருந்து யானையை இறக்கும் பொழுது நிலை தடுமாறிய யானை சாலையில் இருந்த குழியில் விழுந்தது.யானை எழுந்திருக்க முடியாமல் சிரமத்திற்குள்ளானது குறித்து தகவலறிந்த வனத்துறையினரும், பொதுமக்களும் கிரேன் மூலம் பத்திரமாக மீட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்