தமிழ்நாடு

ஒசூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானை கூட்டம்

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள், தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள், தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டுள்ளன. சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தற்போது நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருப்பதால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். குட்டிகளுடன் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை கூட்டத்தை பொதுமக்கள் ரசித்தப்படி வேடிக்கை பார்த்தனர்.

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1