தமிழ்நாடு

"மின்சார கட்டண உயர்வு தவறான செயல்"- மின்சார பொறியாளர் அமைப்பு

தந்தி டிவி

ஜூலை மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது தவறான நடவடிக்கை என்று தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்சார கட்டணம் 49 சதவீதம் உயர்த்தப்பட்ட போதிலும், ஒவ்வொரு ஆண்டும் அதே 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அரசு தரும் 520 கோடி ரூபாய் மானியம், மக்களை சென்றடையாது என்று கூறிய அவர், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதுதான் நஷ்டத்திற்கு காரணம் என்று தெரிவித்தார். தொடர்ந்து மின்சார விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு போதிய பணியாளர்கள் இல்லை என்பதே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்