தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் பலி

தந்தி டிவி

கடலூர் அருகே, மின்சாரம் பாய்ந்து, 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில், கீழநத்தம் கிராமம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் கன மழை பெய்த நிலையில், மின்கம்பி அறுந்து வயல்வெளியில் விழுந்திருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு சென்ற 5 மாடுகள், அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

மேலும் ஒரு மாடு, காயத்துடன் உயிர் தப்பியது. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள், நஷ்ட ஈடு வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்