தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் பலி

தந்தி டிவி

கடலூர் அருகே, மின்சாரம் பாய்ந்து, 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில், கீழநத்தம் கிராமம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் கன மழை பெய்த நிலையில், மின்கம்பி அறுந்து வயல்வெளியில் விழுந்திருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு சென்ற 5 மாடுகள், அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

மேலும் ஒரு மாடு, காயத்துடன் உயிர் தப்பியது. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள், நஷ்ட ஈடு வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை