தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் பலி

தந்தி டிவி

கடலூர் அருகே, மின்சாரம் பாய்ந்து, 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில், கீழநத்தம் கிராமம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் கன மழை பெய்த நிலையில், மின்கம்பி அறுந்து வயல்வெளியில் விழுந்திருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு சென்ற 5 மாடுகள், அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

மேலும் ஒரு மாடு, காயத்துடன் உயிர் தப்பியது. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள், நஷ்ட ஈடு வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்