தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் பலி

தந்தி டிவி

கடலூர் அருகே, மின்சாரம் பாய்ந்து, 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில், கீழநத்தம் கிராமம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் கன மழை பெய்த நிலையில், மின்கம்பி அறுந்து வயல்வெளியில் விழுந்திருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு சென்ற 5 மாடுகள், அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

மேலும் ஒரு மாடு, காயத்துடன் உயிர் தப்பியது. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள், நஷ்ட ஈடு வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு