தமிழ்நாடு

மின் கட்டணம் - அரசின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு

ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதம் செலுத்திய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும், மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதம் செலுத்திய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும், மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

* நான்கு மாதங்களுக்கு சேர்த்து முந்தைய மாத கட்டண அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு

* இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

* இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என கூறினார்.

* பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

* ஊரடங்க காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால், மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

* இதயடுத்து தமிழக அரசின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள். விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு