தமிழ்நாடு

விதி மீறி வைக்கப்பட்ட மின்வேலி....குளிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

சதானந்தபுரத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் சீனிவாசன், முனியசாமி ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, கீழே கிடந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்ததில், முனியசாமி, சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விதிகளை மீறி மோகன்ராஜ் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தது தெரியவந்தது.

இதனிடையே, தலைமறைவான மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு