தமிழ்நாடு

விதி மீறி வைக்கப்பட்ட மின்வேலி....குளிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

சதானந்தபுரத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் சீனிவாசன், முனியசாமி ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, கீழே கிடந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்ததில், முனியசாமி, சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விதிகளை மீறி மோகன்ராஜ் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தது தெரியவந்தது.

இதனிடையே, தலைமறைவான மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்