தமிழ்நாடு

திருச்சியில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி.. பறக்கும் படை காட்டிய அதிரடி

தந்தி டிவி

திருச்சி தில்லைநகர் பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரிலையன்ஸ், டி மார்ட் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனத்தில் கட்டுகட்டாக ரூபாய் 45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதால் அதிகாரிகள் பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உரிய ஆவணங்களின்றி மரம் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட 10 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, சிவகங்கையில் உரிய ஆவனமின்றி கோவில் சிற்பி கொண்டு சென்ற ரூபாய் 83 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்