தமிழ்நாடு

சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

பறக்கும் படையினர் சாலையில் சோதனை செய்வார்கள் என்றும், வீடுகளுக்குள் சோதனை செய்வது வருமான வரித்துறையினர் என்றும், தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

பறக்கும் படையினர் சாலையில் சோதனை செய்வார்கள் என்றும், வீடுகளுக்குள் சோதனை செய்வது வருமான வரித்துறையினர் என்றும், தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொள்வதில் சில பொதுவான அறிவுரைகளை அளித்திருப்பதாகவும், அதன்படி, அவர்கள் சாலையில்தான் சோதனை செய்யவேண்டும் என்றும் கூறினார். ஆனால், அவர்களை மீறி வீட்டுக்குள் வாகனங்கள் சென்றுவிட்டால், அந்த வீட்டை சுற்றி காவலுக்கு நின்றுகொண்டு, வருமான வரித்துறையினரை அழைக்க வேண்டும் என்றும், அவர்கள் சட்டப்படியான அனுமதியைப் பெற்று வீட்டுக்குள் சோதனை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தொகுதிக்கு 2 செலவினப் பார்வையாளர்கள் நியமனம், மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நியமனம் போன்றவை இந்த தேர்தலுக்கென்று சிறப்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை