தமிழ்நாடு

காவல் நிலையத்தில் தீக்குளித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

thanthitv

மதுரையில் சொத்து தகராறு தொடர்பான வழக்கில் போலீசார் மிரட்டுவதாக காவல்நிலையத்தில் தீக்குளித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பைக்காரா பகுதியை சேர்ந்த நாராயணன், தனது தம்பியுடன் இருந்த சொத்து பிரச்சனை தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

நாராயணனின் மகன்களை கஞ்சா வழக்கில் சிறைக்கு அனுப்புவோம் என போலீசார் மிரட்டியதாக கூறி அவர், நேற்று (27-3-26 )காவல் நிலையத்திலேயே தீக்குளித்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் சம்பந்தட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADMK | Edappadi Palaniswamy | EPS | Chennai | TN Election | ஈபிஎஸ் சொல்ல சொல்ல அதிர்ந்த சென்னை

Breaking | MDMK | Vaiko | TN Election | DMK Alliance | பிரேமலதாவை தொடர்ந்து களத்தை அதிரவிட்ட வைகோ

EPS | ADMK | TN Election 2026 | ஜெ. தொகுதியில் கர்ஜித்த ஈபிஎஸ் | பேச பேச அதிரவிட்ட தொண்டர்கள்

DMK | DMDK | MMK | MJK | TN Election | அடுத்தடுத்து களமிறக்கப்படும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள்

Breaking | DMK Alliance | TN election | உதயசூரியனில் நிற்கும் வேட்பாளர் யார்? | அறிவித்தது மஜக