118 ஆண்டுகளை நிறைவு செய்த எழும்பூர் ரயில் நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய ரயில் முனையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம், தனது சேவையைத் தொடங்கி 118 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தென் தமிழகத்திற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கி வரும் இந்த ரயில் நிலையம், இந்திய ரயில்வேயின் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பின் அடையாளமாகத் திகழ்கிறது.