தமிழ்நாடு

முட்டை கொள்முதல் விலை ரூ.4.10 ஆக உயர்த்தி நிர்ணயம்

கோழி முட்டை ஒன்றின் விலை, 4 ரூபாய் 10 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோழி முட்டை ஒன்றின் விலை, 4 ரூபாய் 10 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில், நடைபெற்ற தேசிய முட்டை உற்பத்தியாளர்கள் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக உயர்ந்துள்ளது. கடந்த 8ஆம் தேதி வரை 3 ரூபாய் 35 காசுகளாக இருந்த முட்டை விலை, 6 நாட்களில் 75 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால், விலை உயர்வு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்