அ.தி.மு.க அரசை விமர்சித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டுக்காக என்ன செய்தார் என முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி, முல்லைபெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு போதும் ப.சிதம்பரம் பாடுபட்டதில்லை என விமர்சித்துள்ளார்.