அரசின் தீவிர முயற்சியால், நாட்டிலேயே குணமடைவோர் சதவீதம் தமிழகத்தில் தான் அதிகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர், தனிமனித உறுதியும், ஒழுக்கமுமே நம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.