தமிழ்நாடு

தமிழக பொருளாதார ஆய்வு குழு - முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

தந்தி டிவி

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து அவருடன் ஆலோசனை நடத்தினர் . பொது முடக்கம் காரணமாக பல்வேறு துறைகள் பாதிப்படைந்துள்ள நிலையில், அதனை சீரமைக்கவும் , பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

"கிராமம், நகர்புறத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் வலியுறுத்தல்

முதலமைச்சரிடம் 275 பக்க அறிக்கையை தாக்கல் செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், கிராமம் மற்றும் நகர்புறத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். 2 மாதத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்