தமிழ்நாடு

வண்டலூரில் சிங்கம் உயிரிழப்பு எதிரொலி - தெப்பக்காடு யானைகள் முகாமில் கட்டுப்பாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்றால் சிங்கம் உயிரிழந்த நிலையில், முதுமலை யானைகள் காப்பகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்றால் சிங்கம் உயிரிழந்த நிலையில், முதுமலை யானைகள் காப்பகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள யானைகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி, உணவுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு யானைகளையும் தனித் தனியாக வரவழைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பாகன்கள் மூலம் யானைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க, ஒவ்வொருவரும் சமூக இடைவெளி விட நடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிருமிநாசினி தெளிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்