சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக நுழைவாயில் முன்பு மின் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 55 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், தமிழ்நாடு மின்சார வாரியம் பல பிரிவுகளாக பிரிக்கபபடுவதை தவிர்த்தல், திமுக அரசு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து மின் ஊழியர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது