கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியில் மின் இணைப்பு கொடுக்க மின்வாரிய ஊழியர், கம்பத்தில் ஏறிய போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் வில்பர்ட் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த, மின் வாரிய ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு வந்த, உயர் அழுத்த மின்சாரத்தை துண்டித்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வில்பர்ட்டை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.