பணி நிரந்தரம் கோரி சென்னையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் அருகே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.