கரண்ட் கனெக்ஷன் கொடுக்க லஞ்சம் கேட்ட EB ஆபீஸர் - `சிறப்பாக’ கவனித்து விட்ட பிரியாணி கடை ஓனர்
லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரி கைது செய்து சிறையில் அடைப்பு புதுச்சேரி தவளக்குப்பத்தில் மின்துறை உதவி லைன் ஆய்வாளராகப் பணிபுரியும் ஆறுமுகம் என்பவர், பிரியாணி கடைக்குத் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்லார். அதிகாரிக்கு, லஞ்சம் கொடுக்க விரும்பாத கடை உரிமையாளர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் திட்டமிட்டு ரசாயனப் பொடி தடவிய பணத்துடன் அவரை மடக்கிப் பிடித்துள்லனர். கையும் களவுமாக சிக்கிய ஆறுமுகத்தைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.