Metro Phase 2 வெற்றிகரமாக முடித்த `கழுகு’ - மெட்ரோவுக்காக காத்திருந்த சென்னை மக்களுக்கு மாஸ் அப்டேட் #chennaimetro #subway #drillinstrumental #thanthitv சென்னை மெட்ரோ ரயில், 2ஆம் கட்ட திட்டத்தில், 4வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பணியை கழுகு என பெயரிடப்பட்ட எந்திரம், களங்கரை விளக்கத்தில் இருந்து, திருமயிலையை வந்தடைந்தது. இதேபோல், "பெலிகன்" என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், பனகல் பூங்காவில் இருந்து போட் கிளப் வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி உள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் அடுத்தகட்டப் பணி, மிகவும் சவாலான பொறியியல் தொழில்நுட்பங்களைக் கொண்டது. குறிப்பாக, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையம் அருகே ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள முதல் கட்ட மெட்ரோ சுரங்கப் பாதைகளுக்கு அடியில், தரைமட்டத்தில் இருந்து 30.2 மீட்டர் ஆழத்தில் இந்த புதிய சுரங்கம் தோண்டப்பட உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.