தமிழ்நாடு

"நீட் தேர்வு-தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.

தந்தி டிவி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு பகுதியை சேர்ந்த நீட் தேர்வு எழுதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி சொவுந்தர்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு என்ற அரக்கனை தமிழக அரசு ஒழிக்கும் என்றும், மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகளால் மனம் உடைந்து விடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் வீரமாக நிற்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், இவ்வளவு உயிரிழப்புக்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை என்று கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்