தமிழ்நாடு

"நீட் தேர்வு-தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.

தந்தி டிவி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு பகுதியை சேர்ந்த நீட் தேர்வு எழுதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி சொவுந்தர்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு என்ற அரக்கனை தமிழக அரசு ஒழிக்கும் என்றும், மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகளால் மனம் உடைந்து விடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் வீரமாக நிற்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், இவ்வளவு உயிரிழப்புக்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை என்று கூறினார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே