தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி

* காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக அதிகரித்துள்ளது.

* அதேபோல் நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது.

* 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84 அடியாகவும் அதிகரித்துள்ளது.

* அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 26 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68 அடியாகவும் உயர்ந்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"