தமிழ்நாடு

ஒசூர் அருகே 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்த தாய்

ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தந்தி டிவி
ஒசூர் அருகே மரியாளம் கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஜெயப்பரியா என்பவர், தனது இரண்டு குழந்தைகள் சந்தியா மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெயப்பிரியாவின் கணவர் ரமேஷ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், இருவருக்கும் தினந்தோறும் வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தின் போது ரமேஷ், ஜெயப்பிரியாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜெயப்பிரியா குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"