தமிழ்நாடு

துபாய் - சென்னை கடத்தி வரப்பட்ட குங்குமப்பூ பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த விமானத்தை, சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் துணிகளுக்கு இடையே ஈரான் நாட்டு குங்குமப்பூவை, கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அதிகாரிகள், 60 லட்ச ரூபாய் மதிப்பிலான குங்குமப்பூவை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த சாகுல் அமீதிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"