தமிழ்நாடு

துபாயில் இருந்து நாளை 2 விமானங்கள் சென்னை வருகை - 43 நாள் ஊரடங்கில் முதல் முறையாக சென்னை வரும் விமானங்கள்

43 நாள் ஊரடங்கில் முதல்முறையாக துபாயில் இருந்து 2 விமானங்கள் நாளை சென்னை வர உள்ள நிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

தந்தி டிவி
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இந்தியர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நாளை துபாயில் இருந்து 2 விமானங்களில் 400க்கும் மேற்பட்டவர்களை அழைத்து கொண்டு முதல் விமானம் சென்னை வர உள்ளது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக