தமிழ்நாடு

துபாயில் இருந்து நாளை 2 விமானங்கள் சென்னை வருகை - 43 நாள் ஊரடங்கில் முதல் முறையாக சென்னை வரும் விமானங்கள்

43 நாள் ஊரடங்கில் முதல்முறையாக துபாயில் இருந்து 2 விமானங்கள் நாளை சென்னை வர உள்ள நிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

தந்தி டிவி
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இந்தியர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நாளை துபாயில் இருந்து 2 விமானங்களில் 400க்கும் மேற்பட்டவர்களை அழைத்து கொண்டு முதல் விமானம் சென்னை வர உள்ளது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ