தமிழ்நாடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிறைக்குள் இருந்தபடி ஆடியோ வெளியிட்ட யுவராஜ் - அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என பேட்டி

சிறைக்குள் இருந்த யுவராஜின் ஆடியோ வெளியான நிலையில் விஷ்ணுபிரியாவின் மரணம் தொடர்பாக அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என நீதிமன்றத்தில் ஆஜரான அவர் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் 2018 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறைக்குள் இருந்தபடியே யுவராஜ் பேசி அனுப்பியதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேசிய யுவராஜ், ஆடியோவில் பேசிய அனைத்தும் உண்மை என்றும், டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக அடுத்தடுத்த ஆடியோ வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்