குடிபோதையில் தகராறு - தாக்கப்பட்ட 2 மணி நேரத்தில் உயிரிழந்த நபர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட இளைஞர், 2 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த், மதுபோதையில் கடையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு கீழே விழுந்தார். சில மணி நேரத்தில் மயங்கிய அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.