தமிழ்நாடு

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து...காவலர்கள் இருவர் காயம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மதுபோதையில் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காவலர்கள் இருவர் காயமடைந்தார்.

சென்னையில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வரும் சுகுமார், அவரது அண்ணன் திலீப் மற்றும் ஆயுதப்படை பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வரும் நெப்போலியன் ஆகிய மூவரும், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி காரில் சென்றனர்.

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அருகே அழிஞ்சமேடு பகுதியில், முன்னால் சென்ற கனரக லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுகுமார் மற்றும் நெப்போலியன் காயமடைந்த நிலையில்,

திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலர்கள் இருவரையும், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு