தமிழ்நாடு

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து...காவலர்கள் இருவர் காயம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மதுபோதையில் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காவலர்கள் இருவர் காயமடைந்தார்.

சென்னையில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வரும் சுகுமார், அவரது அண்ணன் திலீப் மற்றும் ஆயுதப்படை பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வரும் நெப்போலியன் ஆகிய மூவரும், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி காரில் சென்றனர்.

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அருகே அழிஞ்சமேடு பகுதியில், முன்னால் சென்ற கனரக லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுகுமார் மற்றும் நெப்போலியன் காயமடைந்த நிலையில்,

திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலர்கள் இருவரையும், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை