போதையில் பச்சை பச்சையாக பேசி சென்னை இளம்பெண் ரகளை.. தலையில் பொக்குனு ஒன்னு வைத்து பொளந்துவிட்ட பப்ளிக்
சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் மதுபோதையில் பொதுமக்களிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசி தகராறில் ஈடுபட்ட இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், அந்தப் பெண்ணைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். காதலனுடன் மது அருந்திவிட்டு உணவகத்திற்கு வந்தபோது அவர் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவரது பெற்றோரை வரவழைத்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.