தமிழ்நாடு

கடும் வறட்சி : சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்...

ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளின் நீரை நம்பி குமரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கடும் வறட்சி மற்றும் ஏரி, குளங்கள் தூர் வாரப்படாததால் செண்பகராமன்புதூர், இறச்சகுளம், பறக்கை உள்ளிட்ட பல இடங்களில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்தால் எந்த விதமான வறட்சியையும் தாங்கும் என்றும், இதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்