வற்றிப்போன பில்லூர் அணை. கோடை துவங்கும் முன்பே ஆரம்பித்த குடிநீர் தட்டுப்பாடு. அன்னூர் பேரூராட்சி பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்க படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பில்லூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தட்டுப்பாட்டை போக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.